கொரோனா கருந்துளையில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க அரசு : வெளிய வர இயலாமல் தவிப்பதாக நாளிதழ்கள் விமர்சனம்
Jul 13 2020 4:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா என்ற கருந்துளையில் சிக்கிக் கொண்டு அதிலிருந்து வெளியே வர வழி தெரியாமல் அமெரிக்க அரசு திணறுவதாக, அந்நாட்டு நாளிதழ்கள் விமர்சித்துள்ளன.
அமெரிக்காவில் வல்லரசு பிம்பத்தை கொரோனா வைரஸ் சுக்குநூறாக உடைத்துள்ளது. சர்வதேச அளவில் அமெரிக்காவில்தான் கொரோனா தொற்று மிக அதிகமாக உள்ளது. கொரோனா வைரசைக் கையாள்வதில் அதிபர் ட்ரம்ப்பின் செயல்பாடுகள் ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. அறிவியல் பூர்வமற்ற தகவல்கள், அலட்சியமான நடவடிக்கைகள் என ட்ரம்ப் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், தொற்று கட்டுக்குள் வரும் முன்னரே பொருளாதார நடவடிக்கைகளை தொடங்க அவர் உத்தரவிட்டதற்கு, நிபுணர்கள்களும், பல்வேறு மாகாண ஆளுநர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது, கொரோனா என்ற கருந்துளையில் சிக்கிக்கொண்டு, வெளியே வர இயலாமல் அமெரிக்கா தவிப்பதாக, அந்நாட்டு நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளை விட அமெரிக்கா ஒரு வல்லரசு என்ற மாயையே ஆதிக்கம் செலுத்துவதாகவும், அவை விமர்சித்துள்ளன.