தென்கொரியாவில் நாய் இறைச்சிக்கு நிரந்தர தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றம் : நாய் இறைச்சியை விற்றால் சுமார் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை
Jan 9 2024 6:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாய் இறைச்சிக்கு நிரந்தர தடை விதிக்கும் மசோதாவை தென் கொரிய நாடாளுமன்றம் நிறைவேற்றியது. பல நூற்றாண்டுகளாக கொரிய தீபகற்பத்தில் வாழும் மக்கள் உண்ணும் நாய் இறைச்சிகள், தென் கொரியாவில் வெளிப்படையாக தடை செய்யப்பட்டதும் இல்லை, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதும் இல்லை. இந்தநிலையில், விலங்கு உரிமைகளை கருத்தில் கொண்டு நாய் இறைச்சித் தொழிலை சட்டவிரோதமாக்குவதற்கான முக்கிய சட்டத்திற்கு தென் கொரியாவின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. நாய் இறைச்சிக்காக நாயை படுகொலை செய்தல், இனப்பெருக்கம் செய்தல், வியாபாரம் செய்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றை இந்த மசோதா 2027ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக்கும். இதுபோன்ற செயல்களுக்கு சுமார் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.