நேசத்திற்குரிய சகோதர, சகோதரிகளே என பதிவிட்ட மாலத்தீவுவாசிகள் : நமது உறவு அரசியலுக்கு அப்பாற்பட்டவை என இந்தியர்களிடம் வருத்தம்
Jan 10 2024 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நேசத்திற்குரிய சகோதர, சகோதரிகளே நமது உறவு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று மாலத்தீவு சுற்றுலா அமைப்புகள் இந்தியர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி மாலத்தீவின் மூன்று அமைச்சர்கள் இழிவாகப் பேசியதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அப்படியே சரிந்தது. பலரும் தங்களது முன்பதிவை ரத்து செய்தனர். இந்தநிலையில் மாலத்தீவுகளின் டூர் மற்றும் டிராவல் ஆபரேட்டர்கள் சங்கத்தினர் இந்தியர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளனர். சிலரின் கருத்து ஒட்டுமொத்த மாலத்தீவர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். தேசங்களை இணைக்கும் பிணைப்புகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை என்றும் மாலத்தீவு சுற்றுலா அமைப்புகள் கூறியுள்ளனர்.