இந்தியாவுடனான மோதல் எதிரொலி.... அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவுக்கு மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல்
Jan 10 2024 12:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தங்களது நாட்டுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீன தலைவர்களிடம் மாலத்தீவு அதிபர் முகமது முயிசு கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியா மற்றும் இந்திய பிரதமர் மோடியை மாலத்தீவு அமைச்சர்கள் மற்றும் அந்நாட்டு சமூக வலைதள பயனர்கள் விமர்சித்ததால் இரு தரப்பு உறவில் சிக்கல் எழுந்துள்ளது. ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தங்களது மாலத்தீவு சுற்றுலாவை ரத்து செய்து வருகின்றனர். இதனால் சுற்றுலா துறையை நம்பி உள்ள மாலத்தீவு அரசுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 5 நாள் பயணமாக சீனா சென்றுள்ள மாலத்தீவு அதிபர் முகமது முயிசு அங்குள்ள பிஃயூஜியான் மாகாணத்தில் நடைபெற்ற வர்த்தக அமைப்பு கூட்டத்தில் தங்கள் நாட்டுக்கு அதிகளவில் சீனர்கள் சுற்றுலா வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.