சீனாவில் வேகமாக பரவிவரும் கரோனா வைரசால் இதுவரை 6 பேர் உயிரிழப்பு - உலக சுகாதார அமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க சீனா முடிவு
Jan 21 2020 8:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் கரோனா வைரசால் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க சீனா முடிவெடுத்துள்ளது.
சீனாவின் வூகான் நகரப் பகுதியில் முதன் முதலில் பரவத் தொடங்கிய வினோதமான வைரஸ் காரணமாக நிமோனியா நோய் தாக்குதலுக்குப் பலர் ஆளாயினர். தற்போது, அந்த வைரசுக்கு 2019-nCoV எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் இந்த வைரஸ், வெளிநாடுகளுக்கும் தற்போது பரவியுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளின் சுகாதாரத் துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வைரசைக் கட்டுப்படுத்த உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட சீன அரசு முனைப்பு காட்டிவருகிறது.