ஆஸ்திரேலியாவில் பாறையில் மோதி ஹெலிகாப்டர் விபத்து : தீ அணைப்புப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் மூன்று பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு
Jan 23 2020 6:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் பணியாளர்கள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் பணிகளில் கனடாவுக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றும் ஈடுபட்டுவந்தது. நாட்டின் தென்கிழக்கில், புகை நிரம்பிய ஆல்ப்பைன் பகுதிகளில் தீ அணைப்புப் பணிகளில் ஈடுபட்ட அந்த ஹெலிகாப்டர், எதிர்பாராத விதமாக பாறைகளின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த பணியாளர்கள் மூன்று பேரும் உயிரிழந்தனர். காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.