துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 15-ஆக அதிகரிப்பு : இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணி தீவிரம்
Jan 25 2020 4:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது.
கிழக்கு துருக்கியில், தலைநகர் அங்காராவிற்கு கிழக்கே சுமார் 550 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எலாசிக் மாகாணத்தில், நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள், வீடுகள் உள்ளிட்டவை இடிந்து சேதமடைந்தன. Elazig நகரில், இடிபாடுகளில் சிக்கி 8 பேரும், Malatya மாகாணத்தில் 6 பேரும் உயிரிழந்ததாக, அந்த நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்திருப்பதாக, அந்தந்த பிராந்திய ஆளுநர்கள் அறிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. துருக்கியின் அண்டை மாகாணங்கள், Mardin, Adana, Osmaniye உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.