அண்டார்டிகா பனிப்பிரதேசத்தில் சாகசப் பயணம் : மலையேற்றம், பனிச்சறுக்கில் ஈடுபடும் வீரர்கள்
Jan 25 2020 12:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அண்டார்டிக் பனி மலைகளில் சாகசப் பயணம் செய்வதற்காக, தென்அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட குழுவினர், பூமியின் தென்பகுதியில் உள்ள பனிமலைகளை, வெற்றிகரமாக அடைந்தனர்.
பூமியின் தென்கோடியில் உள்ள அண்டார்டிக் பகுதியில், எப்போதும் கடுங்குளிர் நிலவும் என்பதால், அங்கு பயணிப்பது சாகசச் செயலாகக் கருதப்படுகிறது. தென்அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுச் சென்ற, சாகசப் பயணிகள் சிலர், கொட்டும் மழை, பூஜ்ஜியம் டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை என பல்வேறு இன்னல்களைக் கடந்து, அடர்ந்த பனிப்பாறைகளை அடைந்துள்ளனர். அங்கு, மலையேற்றம், பனிச்சறுக்கு உள்ளிட்ட பயிற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற பயணங்கள், வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவங்களைத் தரும் என்பதால், அதற்கு முக்கியத்துவம் அளிப்பதாக, சாகசக் குழுவினர், தெரிவித்துள்ளனர்.