இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் எதிரொலி : இலங்கை ராணுவ தலைமை தளபதி அமெரிக்காவில் நுழைய தடை

Feb 15 2020 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை உள்நாட்டு போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறல் தொடர்பான புகாரை அடுத்து, அந்நாட்டு ராணுவ தளபதி Shavendra Silva, தங்கள் நாட்டுக்‍குள் நுழைய அமெரிக்‍கா தடை விதித்துள்ளது.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு போரில், லட்சக்‍கணக்‍கான மக்‍கள் கொல்லப்பட்டனர். உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து, ஐ.நா. வெளியிட்ட அறிக்‍கையில், இலங்கை ராணுவ தளபதி Shavendra Silva மீது கடும் மனித உரிமை மீறல் புகார்கள் தெரிவிக்‍கப்பட்டுள்ளன. இந்நிலையில், இலங்கை ராணுவ தளபதி Shavendra Silva தங்கள் நாட்டுக்‍குள் நுழைய அமெரிக்‍கா தடை விதித்துள்ளது.

இதனிடையே, இலங்கை உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்‍கப்பட்ட முல்லைத்தீவுப் பகுதியில் உள்ள மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில், கடந்த 12-ம் தேதி, குவியல் குவியலாக மனித எலும்புக்‍ கூடுகள் கண்டெடுக்‍கப்பட்டன.

மனித எலும்புகள் மீட்கப்பட்ட பகுதியில், மக்கிய நிலையில் பெண்களின் ஆடைகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இலங்கை உள்நாட்டுப்போர் உச்சத்தில் இருந்த போது, கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கு தமிழர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00