ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து பனிச்சரிவு - 20க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்
Feb 15 2020 1:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் தய்கண்டி மாகாணத்தில், அடுத்தடுத்து பனிச் சரிவுகள் ஏற்பட்டதில், 50 வீடுகள் சேதமடைந்தன. 27 பேர் காணாமல் போயுள்ளனர். 10 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். பனிச் சரிவு ஏற்பட்ட பகுதியில் கடுமையான பனிப் பொழிவு இருந்து வருகிறது. அதுமட்டுமன்றி, மேலும் புதிய பனிச் சரிவுகள் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இதன் காரணமாக, காணாமல் போனவா்களைத் தேடும் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.