கனடாவில் அடர்பனி காரணமாக ஒரே இடத்தில் 200 வாகனங்கள் மோதி விபத்து - இருவர் பலி
Feb 22 2020 1:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கனடாவில், பனிப்பொழிவு காரணமாக, ஒரே இடத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில், 2 பேர் உயிரிழந்தனர். ப்ரெய்ரி நகரில், அடர்பனி காரணமாக, வாகன ஓட்டிகளுக்கு முன்னால் சென்ற வாகனங்கள் கண்ணிற்கு தெரியாததே, இந்த விபத்துக்குக் காரணம் என, போலீசார் தெரிவித்துள்ளனர். இருநூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள், இந்த விபத்தில் சிக்கின. 2 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்குப்பின், நெடுஞ்சாலை எண் 15 மூடப்பட்டது. பின்னர், சேதமடைந்த வாகனங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு, மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.