ஆஸ்திரேலியாவில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து : இருவர் பலி; 10க்கும் மேற்பட்டோர் காயம்
Feb 22 2020 1:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவில், ரயில், தடம் புரண்ட விபத்தில், இருவர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிட்னி நகரிலிருந்து மெல்போர்ன் நகருக்குச் சென்றுகொண்டிருந்த இன்டர்ஸ்டேட் ரயில், வாலன் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 150க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த அந்த ரயில் விபத்திற்குள்ளானதில், ஓட்டுனர் ஒருவரும், பெண் விமானி ஒருவரும் உயிரிழந்ததாக, விக்டோரியா போலீசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மெல்போர்ன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.