ஸ்பெயின் நாட்டில் விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை : உற்பத்தி செய்த காய்கறிகளை அழித்து விவசாயிகள் போராட்டம்
Feb 22 2020 2:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்பெயின் நாட்டில் விளை பொருட்களுக்கு குறைவான விலை கிடைப்பதாக புகார் தெரிவித்து, ஆயிரக்கணக்கான விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகளை சாலையில் கொட்டி அழித்தனர்.
ஸ்பெயின் நாட்டில் கடந்த ஆண்டு முதல் வேளாண்மை வருவாய் பெரும் அளவில் குறைந்துவிட்டதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டின் இறுதியில் 9 சதவிகித வருவாய் இழப்பு ஏற்பட்ட நிலையில், உற்பத்திக்கான செலவினங்கள் அதிகரித்துவருவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உற்பத்தி செய்த பொருட்களுக்குக் உரிய விலை கிடைக்காததால் விரக்தியடைந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். முர்சியா நகரில் நடந்த போராட்டத்தின் போது முட்டைகோஸ்களை சாலையில் போட்டு அழிக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.