சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் மேலும் 109 பேர் உயிரிழப்பு : பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 345 ஆக உயர்வு - 76 ஆயிரத்து 288 பேர் வைரசால் பாதிப்பு
Feb 23 2020 4:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் மேலும் 109 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 345 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரசுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்தபடி உள்ளது. வைரசை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. நேற்று மேலும் 109 பேர் வைரசுக்கு பலியாகியுள்ளனர். இதன்மூலம் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 345 ஆக உயர்ந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒட்டு மொத்தமாக 76 ஆயிரத்து 288 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 397 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.