ஜப்பான் சொகுசு கப்பலில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி - மொத்தம் 16 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு
Feb 26 2020 10:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பான் கடலில் தனிமைப்படுத்தப்பட்ட சொகுசு கப்பலில் மேலும் 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹாங்காங் சென்று திரும்பிய ஜப்பான் சொகுசு கப்பலில் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. வைரஸ் பரவாமல் தடுக்க அக்கப்பல் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. 138 இந்தியர்கள் உள்பட 3 ஆயிரத்து 711 பேர் இக்கப்பலில் பயணம் செய்தனர். இந்தியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் பரவியது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை கப்பலில் உள்ள 16 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு ஏற்படாத இந்தியர்கள், இன்று நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.