மெக்கா, மதீனா புனித தலங்களுக்கு யாத்ரீகர்கள் வர தடை - கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சவூதி அரேபியா அரசு நடவடிக்கை
Feb 27 2020 10:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மெக்கா மற்றும் மதீனாவுக்கு யாத்தீரிகள் வர சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தெற்காசிய நாடுகளை தாண்டி, ஈரான், குவைத் ஆகிய மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து பல்வேறு மத்திய கிழக்கு ஆசிய நாடுகளும் தங்கள் நாட்டுக்கு பயணிகள் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அந்த வகையில், மெக்கா மற்றும் மதீனா ஆகிய புனித ஸ்தலங்களுக்கு யாத்தீரிகள் வருவதற்கு சவூதி அரேபியா அரசு இடைக்கால தடை விதித்துள்ளது. இதேபோல், கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கான சுற்றுலா விசாவிற்கும் அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.