நீர்மூழ்கிக் கப்பலில் கடத்திய 5 ஆயிரம் கிலோ போதைப்பொருட்களை பனாமா போலீசார் மீட்பு - 4 பேர் கைது
Feb 27 2020 7:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீர்மூழ்கிக் கப்பலில் கடத்திய 5 ஆயிரம் கிலோ போதைப்பொருட்களை பனாமா போலீசார் மீட்டுள்ளனர்.
பனாமா நாட்டுக்கு அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் பயணித்ததை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அந்தக் கப்பலை மடக்கிய அதிகாரிகள், அதில் சட்டவிரோதமாக 5 டன் அளவிற்கு போதைப்பொருள் கடத்தியது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார், கப்பலில் பயணம் செய்த கொலம்பிய நாட்டைச் சேர்ந்த நான்கு பேரைக் கைது செய்தனர். அந்தக் கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல் என்றும் விசாரணையில் தெரியவந்தது. இது போன்ற ஒரு கப்பலில் 5 டன் அளவுக்கு போதைப்பொருள் கடத்தப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.