ஹண்டூராஸ் நாட்டில் கொரோனா அச்சத்தால் வீடுகளில் முடங்கிய ஏழை மக்கள் - வீடுகளுக்கே சென்று உணவுப்பொருட்களை வழங்கும் ராணுவத்தினர்
Mar 27 2020 1:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அமெரிக்காவின் ஏழை நாடான ஹண்டூராஸ் ராணுவத்தினர், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்குத் தேவையான சமையல் பொருட்களை வீடுகளுக்கே சென்று வினியோகம் செய்துவருகின்றனர்.
ஹண்டூராஸ் நாட்டில், சுமார் 62 சதவிகித மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, தற்போது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 40 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இதனால் எந்த வேலையையும் செய்யமுடியாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் பொதுமக்களுக்குத் தேவையான பொருட்களை ராணுவத்தினர் நேரடியாக வீடுகளுக்கே கொண்டுசென்று கொடுத்துவருகின்றனர். கோதுமை, பயறுகள், பலவித மாவுப்பொருட்கள், எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இவ்வாறு வழங்கப்படுகின்றன.