இத்தாலியில் தெருக்களில் பணத்தை வீசி எறிந்த பொதுமக்கள் : உயிரைக் காப்பாற்ற இயலாத பணம் பயனற்றது என கருத்து
Apr 1 2020 1:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இத்தாலியில், கொரோனா வைரஸ் தாக்குதலால் நாள்தோறும் கொத்துகொத்தாக மனித உயிர்கள் பலியாகி வரும் நிலையில், தங்களது உயிரைக் காப்பாற்ற இயலாத பணம் தேவையில்லை என, அதனை மக்கள் வீதியில் எறிந்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்குதலில், உலகளவில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி விளங்குகிறது. பணத்தால் உயிரை காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்த அந்நாட்டு மக்கள், விரக்தியில் பணத்தை வீதியில் வீசி எறிகின்றனர். இதனால் சாலைகளில் பணம் இறைந்து கிடக்கிறது. இக்காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.