கொரோனா வைரஸ் - உலகமே கடும் பொருளாதார மந்தநிலை : இந்தியா, சீனா மட்டும் தப்பிக்க வாய்ப்பு - ஐ.நா. வர்த்தக ஆய்வறிக்கை
Apr 1 2020 5:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் காரணமாக உலகமே கடும் பொருளாதார மந்தநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும், இந்தியாவும், சீனாவும் மட்டும் அதிலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் ஐ.நா. வர்த்தக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் கடும் பொருளாதார தேக்கநிலை உருவாகியுள்ளது. இது குறித்து, ஐ.நா. வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, விளைபொருட்கள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் நாடுகள், அடுத்த 2 ஆண்டுகளுக்கு 2-லிருந்து 3 லட்சம் கோடி டாலர் அளவிற்கு வெளிநாட்டு முதலீடுகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், வளர்ந்து வரும் நாடுகளில் வசிப்பதாகவும், இந்த நாடுகள், நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு இரண்டரை லட்சம் கோடி டாலர் தேவைப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து விதிவிலக்காக இந்தியாவும், சீனாவும் மட்டும் தப்பிக்க வாய்ப்புள்ளதாகவும், ஐ.நா. வர்த்தக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.