கொரோனா பாதிப்புக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் ஐ.நா. - பாதுகாப்பு கவுன்சில் விரைவில் கூட்டப்படும் என பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்ரஸ் அறிவிப்பு
Apr 6 2020 11:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பாதிப்பு குறித்து விவாதிக்க, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரைவில் கூட்டப்படும் என அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்ரஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் உயர்மட்ட அளவில் பேச்சுவார்ததை நடத்த வேண்டும் என, அமெரிக்க அதிபர் ட்ரம்பும், ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் வேண்டுகோள் விடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக, கொரோனா பாதிப்பு குறித்து விவாதிக்க, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரைவில் கூட்டப்படும் என அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்ரெஸ் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம், பாதுகாப்பு கவுன்சில் கூட வாய்ப்புள்ளதாகவும், 15 உறுப்பு நாடுகளுடன் ஆலோசனை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.