கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் - காய்ச்சல் குணமாகாததால் மருத்துவமனையில் அனுமதி
Apr 6 2020 12:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போரிஸ் ஜான்ஸனுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 10 நாட்களுக்கு முன்பே உறுதி செய்ய்பட்டாலும், தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால், காய்ச்சல் குறையாததால் நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை உறுதி செய்துள்ள பிரதமர் அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர், மருத்துவரின் அறிவுரைப்படியே போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி போரிஸ் ஜான்சன் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.