"ஸ்பேஸ் எக்ஸ்" தனியார் நிறுவனம் தயாரித்த ராக்கெட் : 2 நாசா விண்வெளி வீரர்களுடன் விண்ணில் பாய்ந்தது
May 31 2020 1:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
"ஸ்பேஸ்எக்ஸ்" என்ற தனியார் நிறுவனம் தயாரித்த ராக்கெட், 2 நாசா விண்வெளி வீரர்களுடன் விண்ணில் பாய்ந்தது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே, இதற்கு முன் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி இருந்தன. இந்த முயற்சியில் இதுநாள் வரை எந்த தனியார் நிறுவனமும் ஈடுபடாமல் இருந்தன. தற்போது இந்த நிலை மாறி வரலாற்றிலேயே முதல்முறையாக, " ஸ்பேஸ்எக்ஸ்" என்ற தனியார் நிறுவனம், முதன்முதலாக, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளது. அந்நிறுவனம் மேற்கொண்ட முயற்சியில் ப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இரு வீரர்களுடன் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. சுமார் 10 ஆண்டுக்குப்பின் அமெரிக்க மண்ணிலிருந்து, விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இந்த " ஸ்பேஸ்எக்ஸ்" விண்கலம் பூமிக்கு திரும்பி வந்து மீண்டும் விண்னுக்கு செல்லும் விண்கலமாகும்.