அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பரவிய போராட்டம் - 40-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஊரடங்கு
Jun 2 2020 12:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் கருப்பின இளைஞர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து பரவிய போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 40 நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழந்தது தொடர்பாக அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கருப்பின மக்கள் மீது வெள்ளையினத்தவர் இனவெறியுடன் நடந்துகொள்வதாக தொடர்ந்து புகார்கள் நிலவி வரும் நிலையில், ஃப்ளாய்ட் உயிரிழந்ததற்கு நீதி வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், வாஷிடங்டன், டி.சி., ஒக்லஹாமா, ஜென்னெசி உள்ளிட்ட நகரங்களில் போராட்டக்காரர்களுக்கு போலீசார் ஆதரவு தெரிவித்தனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டம் நடத்தியவர்களுடன் இணக்கமாக நடந்து கொண்டதால், பெரிய அளவிலான கலவரங்கள் தடுக்கப்பட்டன. இருப்பினும், பல பகுதிகளில் கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்களும் இடம்பெற்றன.
அமெரிக்காவில் இதுவரை 40 நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். நியூயார்க் நகரிலும் போராட்டம் நடைபெற்று வருவதால், அங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, போராட்டத்தைக் கட்டுப்படுத்த மாகாண நிர்வாகங்கள் தவறினால், ராணுவம் இறக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.