அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொலை- தொடரும் போராட்டங்கள் : கருப்பினத்தவர்களின் வணிக நிறுவனங்களைச் சூறையாடிய போராட்டக்காரர்கள்
Jun 3 2020 1:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் நடந்து வரும் போராட்டங்களின் போது ஏராளமான கருப்பினத்தவர்களின் தொழில் நிறுவனங்களும் அடித்துநொறுக்கப்பட்டன.
ஆப்பிரிக்க- அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட், போலீஸ் பிடியில் கழுத்துநெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, கருப்பின மக்களுக்குப் போதிய பாதுகாப்பு கோரி உலகம் முழுவதும் போராட்டங்கள் பரவிவருகின்றன. போராட்டங்களின் போது வணிக நிறுவனங்களைச் சூறையாடுதல், கொள்ளையடித்தல் போன்ற சம்பவங்களும் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றன. இதில் ஏராளமான கருப்பினத்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கலிஃபோர்னியாவின் ஓக்லாண்ட் நகரில் செயல்படும், கருப்பினத்தவருக்குச் சொந்தமான அழகு நிலையம் ஒன்றும் இது போல் அடித்துநொறுக்கப்பட்டது. 6 ஆண்டுகளாகப் போராடி, கடுமையான உழைப்பில் சம்பாதித்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக அதன் உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார். இதே போல் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் புகார்கள் எழுந்துள்ளன.