அமெரிக்காவில் சீன நாட்டு செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலனை - வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தகவல்
Jul 7 2020 5:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் சீன நாட்டு செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் mike pompeo தெரிவித்துள்ளார்.
கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன படையினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது. இதற்கிடையே, பாதுகாப்பு காரணங்களை கூறி டிக்டாக், Share it உள்ளிட்ட சீனா நாட்டின் 58 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டன. இந்த முடிவு சீன தொழில்நுட்ப துறையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுளதாக கருதப்படுகிறது. இந்தியாவின் இந்த முடிவுக்கு அமெரிக்கா அண்மையில் வரவேற்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்தியாவை பின்பற்றி, அமெரிக்காவும் தங்கள் நாட்டில் சீன செயலிகளுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆலோசித்து வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் mike pompeo தெரிவித்துள்ளார்.