சர்வதேச அளவிலான சீனாவின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் - வாஷிங்டன் நகரில் ஒன்று திரண்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள்
Aug 10 2020 1:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்வதேச அளவிலான சீனாவின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அங்குள்ள இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்திய எல்லைப் பகுதிகள் ஆக்கிரமிப்பு, தென்சீனக் கடல் ஆதிக்கம், கொரோனா வைரஸ் விவகாரம் போன்ற சீனாவின் பல்வேறு நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் அந்நாட்டிற்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இதனை வெளிப்படுத்தும் வகையில், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அங்கு வசிக்கும் இந்தியர்கள், வியட்நாம் மக்கள், திபெத் சமுதாயத்தினர் என பல்வேறு நாட்டினரும் திரண்டு, எதிர்ப்பு கோஷங்களை முன்வைத்தனர். தங்கள் நாட்டின் தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியபடி அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.