பொலிவியாவில் உடனடியாக தேர்தலை நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்த ராணுவ நடவடிக்கை
Aug 11 2020 12:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொலிவியாவில் உடனடியாக தேர்தலை நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பொலிவிய அரசு திணறிவருகிறது. இந்நிலையில், உடனடியாகத் தேர்தல் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். சாலை மறியல், தீ வைத்தல் உள்ளிட்ட, போராட்டக்காரர்களின் நடவடிக்கைகள், மருத்துவ நடவடிக்கைகளை பாதிப்பதாக அரசு தெரிவித்துள்ளது. எல் ஆல்ட்டோ நகரில் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்காக கொண்டு செல்லட்ட ஆக்சிஜன் வாகனத்தையும் போராட்டக்காரர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் முக்கியமான மருத்துவமனைகளை சேதப்படுத்திய போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த ராணுவத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ராணுவத்தினரும், போலீசாரும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.