இங்கிலாந்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலையை தவிர்க்க முடியாது - பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்
Sep 19 2020 11:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலையை தவிர்க்க முடியாது என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் 3 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். கொரோனா பரவல் மேலும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இங்கிலாந்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலையை தவிர்க்க முடியாது என்றும், இதனால் சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க புதிதாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். முன்னதாக கொரோனா பரவலை தடுக்க, பொதுவெளியில் ஆறு பேருக்கும் மேல் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.