கடற்கரையில் ஒதுங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் - குவாட்டமாலா மீது ஹண்டூராஸ் அரசு புகார்
Sep 22 2020 6:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குவாட்டமாலாவில் இருந்து ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் ஹண்டூராஸ் கடற்கரைக்கு வருவதாக புகார் எழுந்துள்ளது. ஹண்டூராஸ் நாட்டின் ஒமோவா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பிளாஸ்டிக் பாட்டில்கள் கரை ஒதுங்குகின்றன. இவை அனைத்தும் குவாட்டமாலாவின் மொட்டாகுவா ஆற்றிலிருந்து கடலுக்கு வந்து, பின்னர் அலைகளின் மூலம் இப்பகுதிக்கு அடித்துவரப்படுவதாக ஹண்டூராஸ் அரசு புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக புகார் கடிதம் ஒன்றையும் ஹண்டூராஸ் அரசு, குவாட்டமாலாவுக்கு அனுப்பியுள்ளது.