நியூசிலாந்தில் மாரிஜுவானா செடிகளைப் பயிரிட சட்டப்பூர்வ அனுமதி - அடுத்த மாதம் நடைபெறும் பொதுவாக்கெடுப்பில் முடிவு
Sep 25 2020 2:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியூசிலாந்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுவாக்கெடுப்பில் மாரிஜுவானா என்ற போதைப் பொருளை சட்டப்பூர்வமாக்குவது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாரிஜுவானா செடியிலிருந்து இலைகளைப் பறித்து உலகம் முழுவதும் போதைப் பொருளாகப் பயன்படுத்தும் பழக்கம் இருந்து வருகிறது. இருப்பினும் பல நாடுகளில் இந்த போதைப் பொருளுக்கு தடை நீடிக்கும் நிலையில், சில பகுதிகளில் மருத்துவப் பயன்பாட்டுக்காக மாரிஜுவானா பயிரிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.