பள்ளிகள் தான் முதல் சர்வாதிகாரிகள் என விமர்சித்து தாய்லாந்தில் மாணவர்கள் போராட்டம்
Sep 25 2020 2:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பள்ளிகள் தான் மனிதவாழ்க்கையின் முதல் சர்வாதிகார அமைப்புக்கள் என தாய்லாந்தில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் விமர்சித்துள்ளனர். 'Bad Students' என்ற பெயரில், கடந்த சில நாட்களாக உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். மாணவப் பருவத்தில் பேச்சுரிமை குறித்து தாய் மொழியில் ஒரு புத்தகம் இருப்பதாகவும், அதில், பள்ளிப் பருவத்தில் பேச்சுரிமையைப் பயன்படுத்தும் மாணவர்கள் மோசமானவர்கள் என சித்தரிக்கப்படுவதாக எழுதப்பட்டுள்ளது என்றும், அந்தப் பெயரையே இப்போராட்டத்தின் தலைப்பாக எடுத்துக்கொண்டதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.