ஊட்டச்சத்துக் குறைபாட்டில் ஏமன் முதலிடம் - மரணப்படுக்கையில் ஒரு லட்சம் குழந்தைகள்
Oct 28 2020 4:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சத்துக்குறைபாட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஏமன் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ள ஐ.நா., அங்கு ஒரு லட்சம் குழந்தைகள் மரண படுக்கையில் இருப்பதாகக் கூறியுள்ளது. கொரோனா பாதிப்பு, பொருளாதார சீர்குலைவு, வெள்ளம் போன்ற காரணங்களால் ஏமன் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அங்கு பசி, பஞ்சம் அதிகரித்துள்ளதாகவும் ஐ.நா. குறிப்பிட்டுள்ளது. சுமார் 5 லட்சம் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை ஈன்றெடுத்த பெண்கள், சத்தான உணவு கிடைக்காமல் தவித்து வரும் தகவலும் வெளியாகியுள்ளது.