பெரு நாட்டில் பிறந்தவுடன் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்ட குழந்தை - மருத்துவமனை ஊழியர்கள் மகிழ்ச்சி
Oct 30 2020 8:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரு நாட்டில், பிறந்தவுடன் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்ட குழந்தையை மருத்துவமனை ஊழியர்கள் மகிழ்ச்சியாக வழியனுப்பினர். லிமா நகரில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிய ஜுன் மாதத்தில் பிறந்த Jorgitoவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. குழந்தையின் தாய் ஏற்கெனவே கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளித்த போது, மூன்று மாதம் முன்னதாகவே பிறந்த Jorgitoவுக்கு மருத்துவர்கள் நம்பிக்கையுடன் சிகிச்சை அளித்தனர். தற்போது அக்குழந்தை கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளது.