அமெரிக்காவின் மாடெர்னாவின் தடுப்பு மருந்துக்கு அனுமதி கோரி விண்ணப்பம் - அவசர அனுமதி கோரப்போவதாக மாடெர்னா அறிவிப்பு
Nov 30 2020 9:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனத்தின் புதிய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி கோரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், அமெரிக்க நிறுவனமான மாடெர்னா, புதிய தடுப்பு மருந்தை அறிமுகம் செய்துள்ளது. மூன்றாம் கட்ட பரிசோதனையின் இறுதியில் இம்மருந்து 94 சதவிகிதம் பயனளித்ததாகவும், பெரிய அளவில் பக்கவிளைவுகள் இல்லை என்றும் அறிவித்துள்ள மாடெர்னா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதைப் பயன்படுத்த அவசர அனுமதி கோரி விண்ணப்பிக்கப்போவதாக அறிவித்துள்ளது. எதிர்பார்த்தது போல் அனுமதி கிடைத்தால், உலக அளவில் முதன்முதலாக அதிகாரப்பூர்வ அனுமதி பெற்ற கொரோனா தடுப்பு மருந்து என்ற பெருமை இந்த மருந்துக்குக் கிடைக்கும்.