பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் நோய்- கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு : அரசுக்கு எதிரான பேரணியில் ஏராளமானோர் பங்கேற்பு
Dec 1 2020 11:11AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மீண்டும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால் பிரான்ஸ் நாட்டில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். பாரீஸ் உள்ளிட்ட நகரப்பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அரசு கடந்த இரு தினங்களாக படிப்படியாக விலக்கிவருகிறது. இருப்பினும், மதுபான விடுதிகள், உடற்பயிற்சிக்கூடங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடரும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதைக் கண்டித்து, இது போன்ற தொழிலகங்களில் பணியாற்றும் ஏராளமான பொதுமக்கள் பேரணி நடத்தினர்.