பாகிஸ்தானில் தனிமையில் தவித்துவந்த யானை - கம்போடியா நாட்டு காடுகளில் விட முடிவு
Dec 1 2020 3:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானிலிருந்து கம்போடியா கொண்டுவரப்பட்ட காவன் யானையை வனத்தில் விட முடிவெடுக்கப்பட்டுள்ளது. உலகில் தனிமையில் இருந்த ஒரே யானையான காவன், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகர பூங்காவில் கடந்த 36 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், அந்த யானையை பிற யானைகளுடன் சேர்ந்து வாழ வழி செய்யவேண்டும் என உலக நாடுகளில் இருந்து விலங்கு நல ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர். இதையடுத்து, அந்த யானையை கம்போடியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் முடிவெடுத்தது. இதன்படி, பன்னாட்டு அமைப்புக்களின் உதவியுடன் கம்போடியாவுக்கு அனுப்பபிவைக்கப்பட்ட காவன் யானையை வனத்தில் விடும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.