வாட்ஸ் அப்பின் பிரைவசி அப்டேட் திட்டம் ஒத்திவைப்பு : பயனாளர்களிடம் எழுந்த எதிர்ப்பினால் அந்நிறுவனம் நடவடிக்கை
Jan 16 2021 10:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வாட்ஸ் ஆப்பின் பிரைவசி அப்டேட் திட்டம் பயனாளர்களிடம் எழுந்த எதிர்ப்பினால் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
பேஸ்புக்கிற்கு சொந்தமான பரிமாற்ற செயலியான "வாட்ஸ் ஆப்" பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் "வாட்ஸ் ஆப்" அதனுடைய பிரைவசி கொள்கைகளையும், பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாக அறிவித்தது. மேலும் பிரைவசி பாலிசி அப்டேட் செய்யவில்லை என்றால் அடுத்த மாதம் முதல் வாட்ஸ் ஆப்-ஐ பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பல எதிர்ப்புகள் கிளம்பியதால், வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது திட்டமிடப்பட்ட புதிய வர்த்தக அம்சங்களை செயல்படுத்தும் முடிவை ஒத்தி வைத்துள்ளது.