அமெரிக்காவில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அரசு ஊழியர்களுக்கு ரூ.15 லட்சத்துடன் கூடிய விடுப்பு
Feb 25 2021 2:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகள், வயதானவர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை வீட்டிலேயே கவனித்துக்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு 15 லட்சம் ரூபாயுடன் கூடிய விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மற்றும் கொரோனா உயிரிழப்புகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, குழந்தைகள், வயதானவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை வீட்டில் இருந்து கவனித்துக்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பை அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி அமெரிக்க அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்கள், 15 லட்சம் ரூபாயுடன் கூடிய விடுப்பை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.