சீனாவில் யாங்சே ஆற்றைப் பாதுகாக்க புதிய சட்டத்தை இயற்றியது
Mar 2 2021 12:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் புகழ்பெற்ற யாங்சே ஆற்றை பாதுகாக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்தது.
சீனாவின் தென்பகுதியில் ஓடும் யாங்சே ஆறு, நாட்டின் சமூக- பொருளாதார முன்னேற்றத்தில் மிக முக்கிய பங்காற்றிவருகிறது. மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக நீர்நிலைகள் மாசடைவது மற்றும் நீர் மேலாண்மை போன்ற காரணங்களால் இந்த ஆற்றைப் பாதுகாக்க புதிய சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் படி பல்வேறு மாகாணங்களின் வழியாக பாயும் யாங்சே ஆற்றுப் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாது இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதற்கும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மணல் எடுப்பது, மீன் பிடித்தல் போன்ற நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கும் வகையில் மாகாண அரசுகளுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.