உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிப்பு - உலக சுகாதாரநிறுவனம் எச்சரிக்கை
Mar 4 2021 10:15AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 6 வார காலமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த வாரம் மட்டும் 26 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியதாகவும், இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 7 சதவீதம் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள், ஐரோப்பா, வட தென் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றில் தொற்று அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. பொது சுகாதாரக் குறைவு, சமூக கட்டுப்பாடுகள் தளர்வு போன்ற காரணங்களால் பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் உலகுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.