மியான்மர் நாட்டில் ராணுவத்தினரால் 54 பேர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் : ஐ.நா கடும் கண்டனம்
Mar 5 2021 6:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மியான்மர் நாட்டில் ராணுவத்தினரால் 54 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதற்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆக்சன் சுகாய் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ராணுவத்தின் அத்துமீறல் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கிறது. இரு நாட்டு ராணுவ தாக்குதல்களின்போது காயமுற்ற வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களை தாக்கக்கூடாது என்பது ஐநாவின் விதி.
ஆனால் இந்த விதியைமீறி மியான்மர் ஜனநாயக ஆதரவாளர்களுக்கு சிகிச்சை அளிக்கவந்த மருத்துவ ஊழியர்களும் ராணுவத்தால் தாக்கப்பட்டுள்ளனர். இதுவரை 54 போராட்டக்காரர்கள் மியான்மர் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் கொல்லப்பட்டது உலகையே அச்சுறுத்தியுள்ளது. இதற்கு பல நாட்டுத் தலைவர்கள் உட்பட ஐ.நாவிலும் கடும்கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 21-ம் நூற்றாண்டில் நடந்த முக்கியமான இராணுவ அத்துமீறல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.