அமெரிக்காவில் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வம்சாவளியினர் - அதிபர் ஜோ பைடன் பாராட்டு
Mar 5 2021 11:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில், இந்திய வம்சாவளியினரே ஆதிக்கம் செலுத்துவதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா, அண்மையில், பெர்சவரன்ஸ் ரோவரை வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கியது. இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நாசாவின் மூத்த விஞ்ஞானிகளுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அதிபர் பைடன், நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதற்கு, இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானி சுவாதி மோகன் உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்காவில் அனைத்து துறைகளிலும் இந்திய வம்சாவளியினரே ஆதிக்கம் செலுத்துவதாகவும், துணை அதிபர் உள்ளிட்ட 55 முக்கிய பொறுப்புகளில் இந்திய வம்சாவளியினரே அங்கம் வகிப்பதாகவும் குறிப்பிட்டார்.