அஃப்கானிஸ்தானில் சம உரிமை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் - துரத்தி துரத்தி சவுக்கால் அடிக்கும் தாலிபன்களின் கொடூரச் செயல்
Sep 14 2021 12:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அஃப்கானிஸ்தானில் சம உரிமை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை, தாலிபன்கள், துரத்தி துரத்தி சவுக்கால் அடிக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஃப்கானிஸ்தானில் பெண்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், அரசு அதிகாரிகள் மீதான அடக்கு முறைகளும், மனித உரிமை மீறல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தாலிபன்களை எதிர்த்தவர்கள் தேடி தேடி வேட்டையாடப்படுவதால் மக்களிடம் பெரும் அச்சம் நிலவுகிறது. இதனிடையே சம உரிமை கேட்கும் பெண்களின் போராட்டமும் ஆப்கனில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தாலிபன்கள் துரத்தி துரத்தி சவுக்கால் அடிக்கும் கொடூர காட்சிகள் வெளியாகி சர்வதேச சமூகத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பெண்களின் உரிமைகள் பறிக்கப்படாது என தாலிபன்கள் கூறியிருந்த நிலையில், தற்போது அவர்களின் செயல்பாடுகள் பெண்களை அச்சமூட்டும் வகையில் உள்ளது.
தாலிபன்கள் அஃப்கானிஸ்தானை வசப்படுத்தியதை தொடர்ந்து பொழுது போக்கு பூங்காக்கள் மற்றும் வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. காலியாக கிடக்கும் பொழுது போக்கு பூங்காக்களில் விளையாடி நேரத்தை செலவிடும் தாலிபன்கள், கடை வீதிகளில் துப்பாக்கிச் சூடு பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.