சீனாவில் கடுமையான நிலநடுக்கம் - 2 பேர் உயிரிழப்பு : 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் - 35 வீடுகள் இடிந்து சேதம்
Sep 16 2021 1:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் LUZHOU நகரில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6-ஆக பதிவான இந்நிலநடுக்கம், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்திற்கு Luxian county பகுதியை சேர்ந்த புஜி டவுன்சிப்பில் உள்ள கிராமம் ஒன்றில் 2 பேர் பலியாகி உள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். 35 வீடுகள் இடிந்து சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.