ரயிலில் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா - நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை நடத்திய தென்கொரியா
Sep 17 2021 2:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அடுத்தடுத்து, ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா, ஓடும் ரயிலில் ஏவுகணை சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு தளவடங்கள், ஆயுத தயாரிப்பு போன்றவற்றில் சர்வதேச அளவில் தனிப்போக்கை கடைபிடித்து வரும் வடகொரியா அவ்வப்போது சக்திவாய்ந்த ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இந்நிலையில், ஓடும் ரயிலில் ஏவுகணை சோதனை நடத்தியுள்ள வடகொரியா அது தொர்பான வீடியோவை அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை 800 கிலோ மீட்டர் தூரம் வரையில் பாய்ந்து இலக்கை தாக்கும் வல்லமை கொண்டதாகும்.
இதனிடையே, தென்கொரியா நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணையை செலுத்தி சோதனை செய்துள்ளது. சுமார் மூன்றாயிரம் டன் வெடிபொருட்கள் அடங்கிய ஏவுகணை, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தி சோதனை செய்யப்பட்டது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தென்கொரியா அதிபர் Moon Jae-in, வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த சோதனை நடத்தப்படவில்லை என தெரிவித்தார்.