ஆஸ்திரியாவில் 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்
Dec 2 2021 12:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரியாவில் 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஐரோப்பிய நாடுகளில் மாறுபட்ட ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கியுள்ள நிலையில், வரும் 11-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என ஆஸ்திரியா அரசு தெரிவித்துள்ளது. ஆஸ்திரிய மக்கள் தொகையில் சுமார் 67 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில், 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கடந்த 25-ம் தேதி, ஐரோப்பிய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை ஆஸ்திரிய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. பெற்றோர்களும் கவனம் செலுத்தி வரும் நிலையில் தலைநகர் வியன்னாவுக்கு அருகே உள்ள மையத்தில், தடுப்பூசி போட தங்கள் குழந்தைகளை அழைத்து வந்தனர்.