கொலம்பியாவில் கனமழையால் சாலையில் வெள்ளப்பெருக்கு
Dec 2 2021 5:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொலம்பியாவில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவின் வடமேற்கு நகரமான Medellin நகரில் பெய்த கனமழை காரணமாக, அங்கள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நெடுஞ்சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தொடர் மழையால் 80 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும், 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. பெருக்கெடுத்த வெள்ளத்தால் வாகனங்கள், பேருந்துகள் அடித்துச்செல்லப்பட்டு முற்றிலும் உருக்குலைந்தன. பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களில், உடனடி நிவாரண நடவடிக்கைளில் அந்நாட்டு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.