லைபீரியாவில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் : கர்ப்பிணிப் பெண் மற்றும் 11 மாணவர்கள் உட்பட 29 பேர் பலி
Jan 21 2022 11:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லைபீரியா நாட்டில், மத நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 போ் உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியா தலைநகர் Monrovia-வில் உள்ள கால்பந்து மைதானத்தில் கிறிஸ்துவ நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. இந்த நிகர்ச்சியில், நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது ஒரு கும்பல் அங்கிருந்தவா்களை கத்தியால் தாக்கியதால், ஏராளமானவா்கள் அலறியடித்து ஓடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 11 சிறுவர்கள், ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட 29 பேர் பலியாகினா். ஏராளமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரும் என்பதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.