ஜமைக்காவில் பூங்காவில் இருந்த சிங்கத்தை சீண்டிய பராமரிப்பாளர் - கை விரல்களை கடித்து குதறியதால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி
May 24 2022 12:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜமைக்கா பூங்காவில் சிங்கம் ஒன்று பராமரிப்பாளரின் கை விரல்களை கடித்து குதறிய காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜமைக்கா நாட்டில் உள்ள சந்தாகுரூசு நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் ஏராளமான வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள கூண்டில் அடைக்கப்பட்டிருந்த சிங்கத்தை கவரும் வகையில், பூங்கா பராமரிப்பாளர் ஒருவர் சீண்டியுள்ளார். அப்போது அவரது விரல்களை கவ்விய சிங்கம், கடித்து தின்றது. இதனை பார்த்த அங்கிருந்த சுற்றுலா பயணிகள், அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான சூழலில், இதுகுறித்து விசாரிக்கப்படுமென ஜமைக்கா விலங்குகளுக்கான கொடுமை தடுப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.